கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாகவும், அவரை மருத்துவ வல்லுனர்களை கொண்ட குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில மாதங்களாக மருத்துவ கண்கானிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 27-ஆம் நாள் இரவு அவருக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப் பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 


ரத்த அழுத்தம் காரணமாக காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரபரப்பட்டு வந்தது. இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.


இந்த அறிக்கையில், கருணாநிதிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராகி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில், அவரை கைதேர்ந்த மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.