கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாகவும், அவரை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில நாட்களாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காய்ச்சல் இருந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து திமுக தொண்டர்களும், பொதுமக்களும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தங்களுடைய வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாகவும், அவரை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.


சென்னை கோபாலபுரம் இல்லத்தில் உடல்நலிவு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த போது அவருக்கு திடீரென ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டதை அடுத்து நேற்று அதிகாலை 1.30 மணிக்கு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இந்நிலையில், தொடர் சிகிச்சை காரணமாக கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.