திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பி.23-இல் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் வழக்கில், சுப்ரீம் கோர்ட் கடந்த வாரம் இறுதி தீர்ப்பு வழங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் தமிழகத்திற்கான தண்ணீர் அளவு குறைக்கப்பட்டதை அடுத்து, தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறி இருந்தார்.


அப்படி தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டா விட்டால், காவிரி நீர் பிரச்னைக்காக திமுக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும் எனவும் ஏற்கனவே அறிவித்திருந்தார்.


இந்நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டம், வரும் 23-ஆம் தேதி காலை 11 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது.


இந்த கூட்டத்திற்கு அதிமுக, பாஜக கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.