தமிழகத்திற்கு பாதிப்பிலாத வகையில் காவிரியின் குறுக்கே அணை கட்டிக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்தது. இதனை எதிர்த்து தமிழகமும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.


இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது: தமிழகத்துக்கு பாதிப்பில்லாத வகையில் கர்நாடக அரசு காவிரியில் குறுக்கே அணை கட்டிக் கொள்ளலாம். தமிழக அரசு சார்பில் தேவைப்பட்டால் மேற்பார்வை குழு ஒன்றை அமைத்துக் கொள்ளலாம்.


இந்த குழு மூலம் மேகதாதுவில் அணை கட்டும் பணியை கண்காணிக்கலாம் எனவும், மேலும் பராமரிப்பு பணிகளில் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.