கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இதுவரை சிபிசிஐடி போலீசார் 9 பேரை கைது செய்து உள்ளனர். மற்றொருவர் தலைமறைவாக இருந்த நிலையில், நேற்று இரவு சென்னையில் அருகே உள்ள மதுரவையில் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கி இருந்தார் என்பது காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நள்ளிரவில் அவரை சென்னை காவல்துறையினர் கைது செய்து சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதுவரை 10 பேரை இந்த விவகாரத்தில் கைது செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை உயர்த்த வலியுறுத்துவோம்: திருப்பூர் எம்பி.சுப்ராயன்


கைது செய்யப்பட்ட சிவக்குமாரிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், அவர் இதற்கு முன்பாக 17 பேரிடம் கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கான எத்தனாலை கொடுத்தது தெரியவந்துள்ளது. எவ்வளவு மெத்தனால் கலப்பது என்பது தொடர்பான விவரங்களையும் துல்லியமாக சிவக்குமார் தெரிவித்துள்ளதாகவும் விசாரனையில் தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கும் சிவகுமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. நேற்று செங்குன்றம் பகுதியில் 1800 லிட்டர் மெத்தனால் பறிமுதல் செய்யப்பட்டது. மெத்தனாலை எடுத்து வந்த கெளதம், பரமசிவம், ராம்குமார் மற்றும் பஞ்சிலால் ஆகிய நாலவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். 


அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தான் மெத்தனாலை விற்பனை செய்த சிவகுமாரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கும் இவருக்கும் தொடர்பிருக்குமா? அல்லது அப்பகுதியில் வேறு யாரெனுக்கும் மெத்தனாலை விற்பனை செய்துள்ளாரா? என விசாரணைக்காக தற்போது சிபிசிஐடி போலீசாரிடம் சிவகுமாரை ஒப்படைத்துள்ளதுள்ளனர் மதுவிலக்கு போலீசார். அவர் இப்போது கள்ளக்குறிச்சி அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்யப்படுகிறார்.


கள்ளக்குறிச்சி விவகாரத்தைப் பொறுத்தவரை கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், அம்மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முழுவதுமாக ஒழிக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் அரசு சார்பில் நிவாரணமும் கொடுக்கப்பட்டு வருகிறது. 


மேலும் படிக்க | வயிற்று பிழைப்பிற்காக சென்ற மீனவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ