ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இரண்டு ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய நினைவகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், பேக்கரும்பில், 16.5 கோடி ரூபாயில், நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் ராமேஸ்வரம், பேக்கருப்பு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 


கலெக்டர் அனுமதி பெற்ற பிறகே செய்தி சேகரிக்க முடியும் என ராணுவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. மேலும், நினைவிடத்தில் மொபைல் போன், கேமரா பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.