சென்னை புத்தகக் காட்சி சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் ஓரு நூல் கண்காட்சியாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் "சென்னை புத்தகக் காட்சி", தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் டிசம்பர் 14 முதல் டிசம்பர் 24 வரை 1977-ம் ஆண்டு நடத்தப்பட்டது. முதல் கண்காட்சியில் 22 கடைகள் போடப்பட்டிருந்தன; மதரசா-இ-ஆசாம் பள்ளியில் நடத்தப்பட்டது. 


இந்நிலையில் 41வது சென்னை புத்தகக் காட்சி அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி முதல் ஆரம்பமாகிறது. இந்த கண்காட்சி சென்னை அமைந்தகரையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி (பச்சையப்பன் கல்லூரி எதிரில்), நடைபெறுகிறது.