சென்னையை அடுத்த பூந்தமல்லியில் வசித்து வருபவர். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 26 வயதான நிவேதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், தனது கணவர் போலீஸ் என கூறி தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக தினகரன் மீது நிவேதா பூந்தமல்லி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் தினகரனை பிடித்து விசாரித்தபோது போலீசாரே புருவம் உயர்த்தி போனார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ஐயப்பன் போலீஸ் இல்லை என்பதும், போலீஸ் போன்று போலியாக அடையாள அட்டையை வைத்து கொண்டு கையில் சிக்கியவர்கள் ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் போலீஸ் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதும் தெரியவந்தது. அப்படி பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பி கேட்டு கூட்டமாக வீட்டிற்கு வந்ததால் தினகரன் போலீஸ் இல்லை என தெரியவந்தது.



அதனால் அவரது மனைவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். இத்தனை நாட்கள் கணவர் ஒரு போலீஸ் என்று பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தவர்க்கு ஒரு நிமிடத்தில் அது வெறும் நாடகம் என தெரிந்தது. அதை ஏற்று கொள்ள முடியாததால் போலீசில் அவர் மீது புகாரளித்தார்.


மேலும் படிக்க | ONE SIDE LOVE : லவ் சொல்ல மறுத்த இளம்பெண்ணை ஓட ஓட விரட்டி கொடூரமாக கொன்ற சைக்கோ!



இதையடுத்து தினகரனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து போலி அடையாள அட்டையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் யார் யாரை ஏமாற்றினார் ? எங்கெல்லாம் பணம் வாங்கியிருக்கிறார் ? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


மேலும் படிக்க | நாட்டையே அலறவிட்ட செல்போன் திருட்டு - 2 வருடங்களாக தொடரும் கண்டெய்னர் கொள்ளையர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR