தமிழகத்தில் கிட்டத்தட்ட எட்டு லட்சம் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை உட்பட மொத்தம் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 22 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர் சங்கம், பட்டதாரி ஆசிரியர் சங்கம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட 150 சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று நான்காவது நாளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் செய்து வருவதால், பல அரசு பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு உள்ளது. பல பள்ளிகளில் மாணவர்களே சக மாணவர்களுக்கு பாடம் நடத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என பொற்றோர்கள் கவலைகொண்டு உள்ளனர். பல பள்ளிகள் மூடப்பட்டு உள்ளனர்.


ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பு மற்றும் அரசுக்கு இடையே பலமுறை நடந்த பேச்சுவாரத்தை தோல்வியில் தான் முடிந்தது. ஆனால் தமிழகக் கல்வித்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மீண்டும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதை விட்டுவிட்டு தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்துபவர்களை கைது செய்து வருகிறது தமிழக காவல்துறை. இது எந்தவிதமான் அடக்குமுறை என்பது தெரியவில்லை. அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுத்து பேச்சுவாரத்தை நடத்தி இருந்தால், இந்த தொடர் போராட்டம் நடந்து இருக்காது. 


இந்த நிலையில், ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் தங்கள் கல்வி பாதிக்கப்படுவதால் ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட பின்னர், ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக ஜனவரி 25 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 


ஆனால் ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழு தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்த போராட்டத்தை தொடரும் என அறிவித்துள்ளது. இன்று உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் பணிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள தொடர்ந்து நான்காவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 


பணிக்கு திரும்பாத ஊழியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி உயர் நீதிமன்றத்தின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், பணிக்கு திரும்பாத ஊழியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முடியாது. பணிக்கு திரும்பாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அதிகாரம் கிடையாது. மேலும் அது அரசின் பொறுப்பு ஆகும். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசு தான் சிந்திக்க வேண்டும். எனவே வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.