தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பவேறு பகுதியில், வெப்ப சலனம் காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் தொடர்ந்து மூன்று கனமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.! 


இதையடுத்து, இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது..!


தென்மேற்கு பருவமழை காலம் காரணமாக தமிழகத்தில் ஓரளவு மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக மாறி ஒடிசா மற்றும் வட ஆந்திரா அருகே கரையை கடந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


தற்போது, வட மாநிலங்களில் மழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வருவதால் ஹரியானா, பஞ்சாப், காஷ்மீர் போன்ற நான்கு மாநிலங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...!