சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் இன்றும் இலவச பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மெட்ரோ ரயில் சேவை 42 கிமீ தொலைவிலான முதல் வழித்தடத்திட்டத்தில் நீல நிற வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலும், பச்சை நிற வழித்தடத்தில் சென்டிரல் முதல் சென்ட் தாமஸ் மவுன் வரையிலும் என இரண்டு வழித்தடங்களில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டது.


அந்தவகையில் சென்னை டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 10ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் நேற்று இரவு வரை இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுவர்கள் பெரியவர்கள் என ஏராளமானோர் நேற்று மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.


இதனிடையே சைதாப்பேட்டை - சின்னமலை இடையே உயர் மின் அழுத்த மின்கம்பியில் ஏற்பட்ட பழுதால் ரயில்சேவை மதியம் 12மணி வரை பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். கோளாறு மீண்டும் சரிசெய்யப்பட்டு மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.


இந்நிலையில் பொதுமக்களின் ஆர்வத்தை அடுத்து இன்றும் சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.