டெல்லி சென்றுள்ள தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துறைமுகம் மதுரவாயல் இடையேயான பறக்கும் சாலைத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று இன்று பேட்டி அளித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி சென்றுள்ள தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் உட்பட பல்வேறு மத்திய அமைச்சர்களைச் சந்தித்து தமிழக நலன் குறித்த பேச்சுவார்த்தையை மேற்கொள்கிறார். 


இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி:-


மத்திய மாநில அரசுகள் இணைந்து துறைமுகம் மதுரவாயல் இடையேயான பறக்கும் சாலை திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறினார். மேலும், துறைமுகம் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.