சென்னை: ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு, வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை, நாட்டின் பல இடங்களில் நடந்து வருகிறது. சென்னையில், இன்று, எட்டு இடங்களில் நடந்த சோதனையில், 100 கிலோ தங்கம், 90 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த நவம்பர் 8-ம் தேதி அன்று ரூபாய் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த பின்னர் நாடு முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


சென்னைல் இன்று வருமான வரி துறைசேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ரூ.90 கோடி மற்றும் 100 கிலோ தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியுள்ளது. 


இதில் பெரும்பாலானவை புதிய ரூபாய் நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சேகர் ரெட்டி வீடு சென்னை, தேனாம்பேட்டை பசுல்லா தெருவில் உள்ளது.