சென்னையில்  ஒரு நாள் பெய்த பலத்த மழை காரணமாக,  பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பியதை அடுத்து செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டது. மேலும், மழை நீர் வடியாததால் இரவு முமுவதும் பல இடங்களில்  மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவிக்கும் சூழல் ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று சென்னையில் இடைவிடாது பெய்த மழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சாலை, ரயில் போகுவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் முக்கிய பகுதிகளான  தி.நகர்,கோடம்பாக்கம்,மேற்கு மாம்பலம், கீழ்பாக்கம்,பிராட்வே ஆகிய பகுதிகளில் உள்ள பல  குடியிருப்பு பகுதிகளில்  வெள்ள நீர் சூழ்ந்ததால், நேற்று முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவித்தனர்.


மழை நீரை அகற்ற அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்காததால் தான் இந்த நிலை ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். உடனடியாக இந்த பகுதிகளில் உள்ள தண்ணீரை அகற்றி மின்சாரம் வழங்க போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


ALSO READ | சென்னையில் மேலும் இரு நாட்களுக்கு கன மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்


வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் (3.1 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில், இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் சில நேரங்களில் அதி கனமழையும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை அறிக்கை கூறுகிறது.


ALSO READ | சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR