சென்னை: மெரினாவில் மாமூல் கேட்டு தராததால் பெண்ணை சரமாரியாக வெட்டிய ரவுடி மற்றும் ஒரு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தண்டையார்பேட்டை சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் திவ்யா 30. இவர் தனது தோழி பிரியா என்பவருடன் சேர்ந்து மெரினா கண்ணகி சிலை பின்புறம் சுண்டல் கடை வைத்து நடத்தி வருகிறார். திவ்யாவிற்கு குழந்தை பிறந்ததால் கடந்த ஒரு வருடமாக கடை நடத்தாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் இன்று திவ்யா மற்றும் அவரது தோழி பிரியா ஆகியோர் மீண்டும் மெரினாவில் சுண்டல் கடை போட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த பாத்திமா என்பவர் இங்கு சுண்டல் கடை வைக்க வேண்டுமென்றால், வினோத் என்பவருக்கு மாமூல் கொடுக்க வேண்டும் என மிரட்டி உள்ளார். அதற்கு திவ்யா மாமூல் தர முடியாது என கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | வாழ்ந்தா இப்படி வாழணும் - பட்டதாரி இளைஞரின் கொடைக்கானல் குடில்


பின்னர் திவ்யா மற்றும் அவரது தோழி பிரியா ஆகியோர் நேற்றிரவு கண்ணகி சிலை பேருந்து நிலையம் அருகே நின்றிருந்தபோது, வினோத் என்பவர் நேரில் வந்து மாமூல் கேட்டு திவ்யாவிடம் தகராறில் ஈடுபட்டு, பின்னர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திவ்யாவின் கை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளான்.


காயமடைந்த திவ்யாவை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திவ்யா மெரினா போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல் ஆபாசமாக பேசுதல், வெட்டுதல் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வினோத் மற்றும் பாத்திமா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


மேலும் படிக்க | முத்தமிழ் வித்தகர் கலைஞர் கருணாநிதியின் நினைவுநாள் தமிழகத்தில் அனுசரிப்பு


கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பத்தை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான வினோத் 29 என்பதும், இவர் மெரினாவில் சுண்டல் கடை நடத்தும் வியாபாரிகளிடம் இருந்து மாமூல் வசூலித்து வருவதும் விசாரணையில் தெரிய வந்தது.


மேலும் மாமுல் வசூலில் பாத்திமா என்பவர் ஈடுபட்டு வருவதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மேலும் படிக்க | ரோட்டோர வைத்தியரிடம் வைத்தியம் பார்த்து வரும் தோனி! வைரலாகும் புகைப்படம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ