செங்குன்றம் அடுத்த மாபூஸ்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 41 வயதான பூபாலன். சுவர்களில் விளம்பரம் எழுதுவது, படம் வரைவது என ஓவியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், பூபாலனின் வீட்டு அருகில் வசித்து வந்த அவரது அக்கா தனலட்சுமிக்கும் அவருக்கும் இடையே பூர்வீக சொத்திற்காக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில்தான், இடப்பிரச்சினை தொடர்பாக பெரும் மோதல் ஏற்பட்டு அண்மையில் தனது அக்கா கணவர் ரவியை அரிவாளால் வெட்டியதற்காகப் பூபாலன் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக பூபாலனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு நான்கு சுவருக்குள் முடங்கி கிடந்தார். மேலும், திருமணம் முடிக்காமல் வாழ்க்கையை கடத்தியதால் இக்கட்டான சூழ்நிலையில் அவரை கவனித்து கொள்ள ஆள் இல்லாமல் போனது. இந்நிலையில், சம்பவத்தன்று நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் நுழைந்து பார்க்க, பலத்த காயங்களுடன் பூபாலன் சடலமாக கிடந்திருக்கிறார். 



அதில், அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் பூபாலனின் வீட்டை பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டு வந்தனர். வீட்டில் உருக்குலைந்து கிடந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினருக்கு அக்கம்பக்கத்தினர் தனலட்சுமியை கைகாட்ட அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த தனலட்சுமியிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொள்ள பின்னர், கொலைக்கான காரணங்கள் குறித்து மெல்ல மெல்ல வெளிவந்தன. 



சொத்துக்காக ஆசை பட்ட தனலட்சுமி, உடன் பிறந்த தம்பி என்றும் பாராமல் அவரை கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார். கணவர் ரவியுடன் சேர்ந்து ஆள்நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள் நுழைந்தவர்கள் உருட்டுக்கட்டையால் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்து போன பூபாலனை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில், உயிருக்குப் போராடிய நிலையில் அவர் துடிதுடித்து இறந்து போனார். 



மேலும் படிக்க | யார் தலைவன் என்பதில் தகராறு - கூட்டாளிக்கு குழிதோண்டிய நண்பர்கள்!


இதனையடுத்து தனலட்சுமி மற்றும் அவரது கணவர் ரவி இருவரையும் கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்காக தம்பியை கணவருடன் சேர்ந்து அக்காவே அடித்து கொன்ற சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | பிறந்தநாளன்று மதுவிருந்து கொடுத்த கூலிக்கு நண்பனை தீர்த்துக்கட்டிய கொடூரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR