சென்னை: முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11:30 மணி அளவில் காலமானார்.


ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.


இன்று பிற்பகல், அவர் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலேவும் இதை உறுதிப்படுத்தினார். இந்நிலையி்ல் நேற்று இரவு 11:30 மணி அளவில் ஜெயலலிதா உயிர் பிரிந்தது.