கும்பகோணம்: கோடநாடு கொலை, கொள்ளையில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருக்கலாம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்!.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோடநாடு கொள்ளை - கொலை சம்பவம் குறித்து தெஹல்ஹா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் ஆவணப்படம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். இந்த வீடியோவில் கோடநாடு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள், கொள்ளக்காக திட்டமிட்டது பற்றி தெளிவாக எடுத்துரைக்கின்றனர். முக்கியமாக, கோடநாடு எஸ்டேட்டில் இருந்து பணம், நகைகள் மற்றும் சில முக்கியமான ஆவணங்களை கொண்டு வந்து கொடுக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜிடம் கூறியதாக குற்றவாளி சயன் தெரிவித்துள்ளார்.


கொடநாடு சம்பவம் தொடர்பாக 5 பேர் இறந்தது திட்டமிட்ட படுகொலை என்றும், கொடநாடு சம்பவத்திலும், ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னணியிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தமிழக அரசியலில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் எனவும் தமிழக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் அவர்கள், கோநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பது போல் தோன்றுகிறது என தெரிவித்துள்ளார். இது தொடர்பான உண்மை விரைவில் வெளிவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சில கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.