சென்னை: சென்னையில் 800 அரங்குகளில் 1லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்பிலான புத்தகங்கள் அடங்கிய 45வது புத்தக காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று முதல் மார்ச் 6 வரை என 19 நாட்கள் 45வது புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.  புத்தக கண்காட்சிக்கு வருவதற்காக bapasi. Com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் புத்தக கண்காட்சிக்கான டிக்கெட் பெறலாம். அனைத்து நாட்களும் காலை 11 மணி முதல  இரவு 8 மணி மணிவரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புத்தக கண்காட்சி ஜனவரி 6ம் தேதி நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்பொழுது கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்தது. இதனால் புத்தக காட்சியை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக முதலமைச்சர் அரசின் சார்பில் நன்றி தெரிவித்தார். இதனால் பபாசி அமைப்பிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு வழக்கமாக அளிக்கும் 75 இலட்சத்துடன் பாபாசிக்கு கூடுதல் நிதியாக 50லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்தாண்டு 1கோடியே 25லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.


மேலும், மதுரையில் 14 ஆண்டுகளும், கோவையில் 4 ஆண்டுகளாகவும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதே போன்று மற்ற மாவட்டங்களில் புத்தக காட்சி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படும் எனத் தெரிவித்தார். மேலும், மதுரையில் 114 கோடி மதிப்பில் மாபெரும் நூலகம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. நூலகம் விரைவில் துவங்கப்பட உள்ளது. இது போன்று அறிவு கோயில்கள் திறப்பது நம் அரசின் கடமை. 


திராவிட ஆட்சி சாதனை:


தமிழ் மொழி அறிவு கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளது, போட்டித்தேர்வு, எழுத்துத்தேர்வுகளை தமிழ் நடத்திட அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் அனைத்து தேர்வு வாரியங்களின் தேர்வுகள் கட்டாயம் தமிழ் தகுதி பெற்றிருக்க வேண்டும். அன்னை தமிழ் மொழி கோயில்களில் ஒலிக்க துவங்கியுள்ளது. கப்பலோட்டிய தமிழன் வ உ சியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நூல்களை இரண்டு பெரும் தொகுதிகளாக அரசு வெளியிடப்பட்டுள்ளது.


செம்மொழி தமிழாய்வு மையம் அமைந்துள்ள மேடவாக்கம் சாலையை செம்மொழி சாலை என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செம்மொழி தமிழ் இருக்கை அமைக்க பல நாடுகளின் பல்கலைகழகத்துடன் அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மேலும் அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரது வழியில், புத்தகங்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த வகையில், உயரிய எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என அறிவித்தார். அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் 5 சென்ட் நிலத்தில் அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படும் முதலமைச்சர் அறிவிப்பு விடுத்தார். இதுவே தான் இந்த ஆட்சியின் சாதனை, திராவிட ஆட்சி சாதனை என குறிப்பிட்டார்.


மேலும் தன்னை பார்க்க வருபவர்கள் புத்தகத்தை மட்டுமே பரிசாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்த பிறகு, தனக்கு பரிசாக வழங்கப்பட்ட 1.5லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் யாழ்பான நூலகம், பல நாடுகளில் உள்ள சிறிய நூலகங்களுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது எனக்கூறினார்.


உங்களின் ஒருவன்:


தான் எழுதிய தனது வாழ்க்கை சுவடுகளை அடங்கிய "உங்களின் ஒருவன்" என்ற தலைப்பிலான புத்தகம் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பினையும் தெரிவித்தார். 


ஒவ்வொரு ஆண்டும் புத்தக திருவிழாவின் பொழுது புதிய அறிவிப்புகள் வெளியிடுவது கலைஞரின் வழக்கம். அந்த வகையில் நானும் புதிய அறிவிப்பினை வெளியிட தயாராக இருப்பதாகவும், ஆனால் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், புதிய அறிவிப்பு வெளியிட முடியவில்லை, இதனால் தேர்தலுக்கு பிறகு நல்ல அறிவிப்பினை வெளியிடுவேன் என நம்பிக்கை தெரிவித்தார். 


பொற்கிழி விருது: 


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரில் ரூபாய் 1 கோடி நிதியில் ஆண்டுக்கு 6 பேருக்கு கலைஞர் பொற்கிளி விருது வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதல்வர் இந்த ஆண்டு தொடக்க நாளில் 6 பேருக்கு விருது வழங்கினார்.


முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது பெறுபவர்கள்


1. உரைநடை -  பத்திரிகையாளர் சமஸ்.


2. நாடகம் - பிரசன்னா ராமசாமி.


3. கவிதை -  கவிஞர் ஆசைதம்பி 


4. புதினம் - வெண்ணிலா


5. பிறமொழி - பால் சக்கரியா


6. ஆங்கிலம் - மீனா கந்தசாமி.


பபாசி விருதுகள் பெறுபவர்கள்.


1.சிறந்த பதிப்பாளர் விருது - மீனாட்சி சோமசுந்தரம், ரவி தமிழ்வாணன்.


2.  சிறந்த புத்தக விற்பனையாளர் விருது - பொன்னழகு.


3. சிறந்த குழந்தை எழுத்தாளர்  விருது - திருவை பாபு


4. சிறந்த தமிழறிஞர் விருது - தேவிரா.


5. சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர் விருது - பாரதி பாஸ்கர்.


6. சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான - கு.வை பாலசுப்ரமணியன்.


94 பேருக்கு 94லட்சம் ரூபாய் மதிப்பில் பொற்கிழிகள் வழங்கப்பட்டது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR