வங்கக்கடலில் உருவான ஒகி புயலில் சிக்கியவர்களை மீட்கும் பணிக்கு அதிகப்படியான ஹெலிகாப்டர்களை அனுப்ப வேண்டும் என உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்மேற்கு பருவ மழையானது மேற்கு திசையில் 230 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டதை அடுத்து கடந்த 3 நாட்களாக கடுமையாக புயல் சூழ்ந்து வருகிறது. 


இதனால் கன்னியாகுமரியைச் சேர்ந்த 500-க்கும் அதிகமான மீனவர்கள் கடலில் சிக்கி கொண்டதால் அவர்களது உறவினர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதுமட்டுமில்லாமல் கன்னியாகுமரியில் கடல் சீற்றத்தால் விசைப்படகு உடைந்ததிலும் 10 மீனவர்கள் கடலில் தத்தளித்து வருகின்றனர்.


தற்போது ஒகி புயல் காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் போக்குவரத்துக்கு நெறிசல் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். கடற்படை மற்றும் கடலோரக் காவர் படையினர் பாதிக்கபட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஒகி புயலால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு கடற்கரை பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள கடற்படை மற்றும் கடலோரக் காவலர்கள் மூலம் ஒகி புயலிலிருந்து இதுவரை 400 பேர் மீட்கப்பட்டனர். எனினும் முழுமையான மீட்பு பணியில் மீதம் உள்ளவர்களையும் மீட்க வேண்டும் என கேரளா மக்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.  


இந்நிலையில் கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க அதிகப்படியான ஹெலிகாப்டர்களை அனுப்ப வேண்டும் என உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.