அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்ட நடிகர் ரஞ்சித் சசிகலா இறந்துவிட்டதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் சமீபத்தில் பாககவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்த நடிகர் ரஞ்சித், தஞ்சாவூரில் அமமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் முருகேசனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,


அமமுக பொதுச்செயலாளர் சசிகலா இறந்துவிட்டதாக தெரியாமல் கூறினார். உடனடியாக சுதாரித்துக்கொண்டார் அவர். அவர் கூறிய இந்த கருத்தால் கூட்டத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.