சென்னை அடுத்த மேடவாக்கத்தில் பிரபல துணிக்கடையான பஞ்சாப் ஹண்டலூம் இயங்கி வந்ததது. இந்த கடையின் தரைத்தளத்தில் நேற்று இரவு திடீரென தீ பற்றியுள்ளது. இந்த தீ மளமளவென பரவி கடையின் முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் பற்றி எரிந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடைகள் மற்றும் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் தீ எப்படி பிடித்தது என்ற தகவல் வெளியாகவில்லை. இந்த சம்பவம் காரணமாக கடையின் சுற்றுவட்டார பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. இது தொடர்பான காட்சிகளை வாகன ஓட்டிகள் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். 


மேலும் படிக்க | Bomb Blast: பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: ஒருவர் பலி 13 பேர் காயம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR