வார இதழ் ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கும் கட்டுரையில், தொழிலாளர்கள் அவ்வப்போது அடிக்கும் ஆராய்ச்சி மணிகளுக்கு அரசு செவிசாய்த்திருந்தால், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தமே நடந்திருக்காது என்று தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர்கள் ரஜினியும், கமலும் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக கூட்டணி அமைப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், இதற்க்கு கமல் விளக்கம் அளித்துள்ளார்.


‘ரஜினியும் நானும் சேர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு உண்மையில் காலம்தான் பதில் சொல்லும். எங்கள் இருவரின் கொள்கை ஒன்றாக பொருந்துகிறதா என பார்க்க வேண்டும். ரஜினியும் நானும் சேர்வது தேவையா? என்பதை இருவருமே யோசிக்க வேண்டும்’ என்றார்.