கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியை போலீசார் கைது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாதம் 25 ஆம் தேதி மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போனார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் தடாகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசாரும் உறவினர்களும் குழந்தையை தேடி வந்தனர். இரவு முழுவதும் குழந்தை கிடைக்காத நிலையில்,  26 ஆம் தேதி காலையில் சிறுமி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.


மீட்கப்பட்ட சிறுமியின் உடலை காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது உறுதியானது. குற்றவாளியைப் பிடிக்க 10 தனிப்படை போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், தனிப்படையின் தேடுதல் வேட்டையில் இன்று குற்றவாளி சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், சிறுமியை வன்கொடுமை செய்ததை சந்தோஷ்குமார் ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.