தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.  இதற்கிடையே, அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


மேலும் வரும் 7-ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. 



இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மிதமான மழை பெய்து வருகிறது.


எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தலை காட்ட, சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது. 


இந் நிலையில், கனமழை காரணமாக சென்னையில் மட்டும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார். மேலும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையிலும் பள்ளிகள் நடைப்பெற்றால் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்!