சிவகாசி: சிவகாசி அருகே உள்ள அய்யம்பட்டி பகுதியில் பள்ளி சென்று திரும்பிய 11ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்தி வெளியாகி பல கேள்விகளை எழுப்புகிறது. கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், விருதாச்சலம் என தற்கொலை செய்துக் கொள்ளும் மாணவிகள் தற்கொலை பட்டியலில் மீண்டும் ஒரு மாணவி இணைந்துவிட்டார். 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் மீண்டும் அதிர்வலைகளை எழுப்பியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவகாசி அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் இவரது மனைவி கடல் மீனா. இவர்களுக்கு பாண்டிச்செல்வி,யோக லட்சுமி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கண்ணன், கடல் மீனா இருவரும் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகின்றனர். இதில் இரண்டாவது மகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.


மேலும் படிக்க | தமிழகத்தில் தொடரும் தற்கொலைகள்; திருவள்ளூரில் பிளஸ் 2 மாணவி தற்கொலை


பாண்டிச்செல்வி திருமணம் முடிந்து அதே பகுதியில் வசித்து வருகிறார். இவரது தங்கை யோகலட்சுமி அய்யம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். 


நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மாணவி தனியாக இருந்துள்ளார். மாணவியின் பாட்டி சுப்புத்தாய் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, மாணவி தூக்கில் தொங்குவதை பார்த்து அலறியிருக்கிறார்.


பேத்தி தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு சுப்புத்தாயின் அலறலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.


மேலும் படிக்க | Student Death: விருத்தாசலத்தில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை


உடனடியாக தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த பெண்ணை கீழே இறக்கினார்கள். உடனடியாக இதுகுறித்து மாறனேரி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.


அய்யம்பட்டி பகுதியில் பள்ளி சென்று திரும்பிய மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | ஆசிரியர்களுக்கு செக் வைத்த பள்ளி கல்வித்துறை! புதிய அதிரடி திட்டம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ