சென்னை: முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா நேற்று இரவு உயிரிழந்தார். இந்நிலையில் ஜெயலலிதாவிற்கு இன்று இறப்பு சான்றிதழை வழங்கியுள்ளது சென்னை பெருநகர மாநகராட்சி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்ப்பட்டு நேற்று இரவு 11.30 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். இந்நிலையில் சென்னை மாநகராட்சியின், பொது சுகாதாரத்துறை, ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை இன்று வழங்கியது.


அந்த சான்றிதழில் அவர் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் அவரது தந்தை பெயர் ஜெயராம், தாய் பெயர் சந்தியா என்பதும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.