கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  கோவையில் மீண்டும் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டில் அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  இந்தநிலையில் கோவை வடவள்ளியை சேர்ந்த 56 வயது மூதாட்டிக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | PM Modi: தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி... சென்னை டூ நீலகிரி வரை - பக்கா பிளானில் திடீர் ட்விஸ்ட்!



இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதேபோல் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த மாதம் 23-ந் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


ஏற்கனவே கடந்த 5ஆம் தேதி 55 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த நிலையில் இந்த வாரத்தில் மட்டும் இன்றுடன் மூன்று பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் கோவை மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | வந்தே பாரத்... 'வாவ்' போட்ட வானதி! ஆர்வத்தில் கோளாறாக பேச்சு - விமானத்தை போல் வேகமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ