சென்னையில் காதலிக்க மறுத்ததால் இளம்பெண் ஒருவர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் உள்ள தாம்பரத்தில் உள்ள கடை ஒன்றில் சேல்ஸ்கேர்ளாக பணியாற்றி வருபவர் சோனியா (வயது23). இவர் நேற்று இரவு வீடு திரும்புவதற்காக பெருங்குளத்தூர் பஸ் ஸ்டாண்டில் நின்றுள்ளார். அப்போது அங்கே பைக்கில் வந்த பிரசாத் (வயது24) என்பவர் பைக்கில் ஏறும்படி சோனியாவை அழைத்துள்ளார். ஆனால் சோனியா மறுத்தள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரசாத், சோனியாவின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு பைக்கில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். தப்பிச் சென்ற பிரசாத் போலீஸ் ஸ்டேஷனில் சென்று சரணடைந்துள்ளார்.


இரத்த வெள்ளத்தில் கிடந்த சோனியாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே சோனியா உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.