கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மதுரைவீரன். இவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகிலுள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் மதுரைவீரன் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி உள்ளனர். அப்போது அதே பகுதியில் கரும்பு காட்டில் அவர் சடலமாக இருப்பதாக ஊர் மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடபொன்பரப்பி காவல்துறையினர் மதுரை வீரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


ALSO READ | நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை; திருச்செந்தூர் கோவிலுக்குள் மழைநீர்


மேலும் மதுரை வீரனின் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் மதுரைவீரன் அதே பகுதியில் முனியன் என்பவரது வயலில் சட்டத்தை மீறி போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. மேலும் மின் வேலியில் சிக்கி மதுரை வீரன் உயிரிழந்தார் என்பதை மறைப்பதற்காக முனியன் மற்றும் அவரது உறவினர்களான இளையராஜா, வீரன், அய்யனார் ஆகியோருடன் சேர்ந்து மதுரை வீரனின் உடலை அங்கிருந்து எடுத்து அருகில் உள்ள துரைக்கண்ணு என்பவருக்கு சொந்தமான கரும்பு காட்டில் வீசி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. 


இந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் முனியன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர்.


ALSO READ | பைப்புல தண்ணி வருமா? இங்க பணமே வரும்!! அதிகாரிகளை அசர வைத்த தகிடுதத்தம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR