தர்மபுரி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு இதற்குக் காரணமான கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமத்தை சேர்ந்த மாணவி அருகில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச் மாணவியை பின்தொடர்ந்து அதே ஊரைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் ஆகியோர் மாணவியை பின்தொடர்ந்து சென்றதாகக் கூறப்படுகிறது.


மாணவிக்கு சகோதரன் முறை கொண்ட இருவரும் அவரை அருகில் உள்ள ஓடைக்கரைக்கு தூக்கிச் சென்று மாணவியின் வாயில் துணியை வைத்து அடைத்த இருவரும் அவரை வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியை சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். அனால், சிகிச்சைப்பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 


இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றநிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட ட்விட்டரில், "தர்மபுரியில் 17வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த கொடூரச் செய்தியறிந்து துயருற்றேன். மனிதம் இப்படியெல்லாம் வக்ரம் அடைந்து வருவது பெரும்வேதனை...!. 


இதற்குக் காரணமான கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும்!. பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ?". என அவர் தெரிவித்துள்ளார்.