சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரு சக்கரம், 4 சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி ஒரே நாள் 170 விபத்துகள் நடைபெற்றன. மேலும் 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புத்தாண்டு நள்ளிரவில் சென்னையில் இளைஞர்கள் கடற்கரை சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம்.


இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் கடற்கரை சாலையில் இளைஞர்கள் வாணவேடிக்கையுடன் இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.


இந்நிலையில் கொண்டாட்டத்துக்கு பிறகு, இரு சக்கர, 4 சக்கர வாகனங்களில் இளைஞர்கள் சீறி பாய்ந்தனர். இதில் 170 விபத்துகள் ஒரே நாள் இரவில் நடைபெற்றன. விபத்தில் காயமடைந்த 200-க்கும் மேற்பட்டோர் ராஜீவ்காந்தி, ராயப்பேட்டை, ஸ்டான்லி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.