தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கரும்பு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை 4 ஆண்டுகளாக வழங்காத தமிழக அரசை கண்டித்தும்,  தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளர்களை கண்டித்தும் இந்த ஆர்பாட்டம் நடைப்பெற்று வருகின்றது.


மேலும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் மற்றும் பயிர்க்காப்பீட்டு தொகையை உடனே வழங்க வலியுறுத்தியும். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கூட்டுறவு வங்கி மற்றும் மத்திய வங்கிகளில் பெற்ற கடனை ரத்து செய்யாத அரசுகளை கண்டித்தும் இந்த ஆர்பாட்டம் நடைப்பெற்று வருகின்றது!


இந்த கண்டனம் ஆர்பாட்டம் குறித்து முன்னதாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது!