சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று (ஜனவரி 4) அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திமுக பொதுக்குழு கூட்டம் டிசம்பர் மாதம் 20-ம் தேதி நடைபெற இருப்பதாக இருந்தது தள்ளி வைக்கப்பட்டது.


இந்தாண்டில் நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9:30 மணிக்கு கூட இருப்பதாகவும், இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை ​வகிப்பார் என்று எதிர்பார்க்கப்டுகிறது.


தற்போது, அக்கட்சியின் பொருளாளராக உள்ள மு.க.ஸ்டாலினுக்கு, பொதுக்குழு கூட்டத்தில், செயல் தலைவர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடம் காணப்படுகிறது.


இப்பொதுக் குழுவில் சுமார் 3,000-ம் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். மேலும் தமிழகத்தில் நிலவும் வறட்சி, விவசாயிகளின் தொடர் தற்கொலைகள், வர்தா புயல் இழப்பீடு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்தும் அரசியல் நிகழ்வுகள் குறித்த முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.