தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி தொடங்கியது. இதற்க்கு பிறகு பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க் களின் விவாதம் மார்ச் மாதம் 24-ம் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து மறு தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தமிழக சட்டசபை கூட்டம் துவங்கியது. அப்போது, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. உறுப்பினர்கள் எழுந்துநின்று இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தினர். 


இதையடுத்து, பேரவைக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று, அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், திமுக எம்எல்ஏக்கள் பின்னணியில் "தெர்மகோல் தெர்மகோல்" என கோஷம் எழுப்பியதால் திமுக எம்எல்ஏக்கள் உட்பட பலரும் சிரித்ததால் சட்டப்பேரவையில் சிரிப்பலை உருவானது.