அடுத்த பொதுச்செயலாளரை தேர்வு செய்ய திமுக பொதுக்குழு கூட்டம் மார்ச் 29ஆம் தேதி நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக பொதுச் செயலாளராக கடந்த நாற்பது ஆண்களுக்கும் மேல் பணியாற்றி வந்த பேராசிரியர் க.அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மார்ச் 7 ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், அந்தக் கட்சி தற்போது புதிய பொதுச் செயலாளரைத் தேர்வு செய்யவுள்ளது. அந்தக் கட்சியின் பொதுக்குழு எதிர்வரும் மார்ச் 29 ஆம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலையத்தில் நடைபெறவுள்ளது. திமுகவின் புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்வதற்கான அந்த கூட்டத்தில் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களையும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு ஸ்டாலின் அழைப்புவிடுத்துள்ளார்.


திமுக பொருளாளராக உள்ள துரை முருகன் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து திமுக தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் 29-03-2020 அன்று காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும். அப்போது திமுக பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.