தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அவ்வப்போது உடல்நிலை குறைபாடு ஏற்ப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தான், சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் விஜயகாந்த். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை திரும்பிய அவர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். தற்போது மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்ப்பட்டதால், வழக்கமான பரிசோதனைக்காகவே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


இந்நிலையில் அவரை குறித்து வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் விஜயகாந்த் நலமாக இருக்கிறார். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.