சென்னை: தனது பிறந்த நாளை யாரும் ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என திமுக-வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் மூலம் கேட்டு கொண்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-


மார்ச் 1 அன்று எனது பிறந்த நாளின் போது, சால்வைகளுக்கு பதில் நல்ல புத்தகங்களை வழங்கிடுங்கள். 


மிகுதியாக சேரும் புத்தகங்கள் நூலகங்களுக்கு வழங்கப்படும். 


தனது பிறந்தநாளை யாரும் ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம். மக்களுக்கு அதிருப்தி தரும் அலங்கார ஆடம்பர பேனர்களை தவிர்க்க வேண்டும். 


ரத்ததானம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மரக்கன்று நடுதல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.