சென்னை: அதிமுகவில் இருந்து அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் அதிரடியாக நீக்கப்பட்டு புதிய அவைத் தலைவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளதாக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா அறிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தலைமையில் இரண்டாக பிளவுபட்டுள்ளது. முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனும் இணைந்துவிட்டார். 


அதிமுகவின் தாற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா அறிவிக்கப்பட்டது செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவிக்கக் கோரி மனு அனுப்பியிருந்தார் மதுசூதனன். தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய மனுவில், அதிமுகவின் சட்ட விதிகளின்படி தாற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவியே இல்லை, அப்படி யாரையும் தேர்வு செய்யவே முடியாது என்று கூறியிருந்தார் மதுசூதனன்.