பிரபல பத்திரிக்கையாளரான நக்கீரன் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


நக்கீரன் புலனாய்வு இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால். இந்நிலையில் நக்கீரன் இதழில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக பல செய்திகள் வெளிவந்ததாகவும், அதில் ஆளுநர் குறித்து அவதூறாக எழுதப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. 


இந்நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து புனே செல்லவிருந்த நக்கீரன் கோபாலை காவல்துறையினர் கைது செய்தனர். ஆளுநர் பணியில் தலையிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள ‘நக்கீரன்’ கோபால் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.