அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ததை அடுத்து இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பயணத்தில் சசிகலா மற்றும் தினகரன் நீக்கம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை சந்தித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.


முன்னதாக இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் பங்கேற்றனர். 


இந்நிலையில் நிர்வாகிகள் கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை:-


* சசிகலா, டிடிவி தினகரன் செய்யப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செல்லாது.


* அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுவை விரைவில் கூட்ட முடிவு.


* சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க முடிவெடுத்து தீர்மானம்.


* நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி.யை அதிமுக.,வே எடுத்து நடத்த வேண்டும்.