திமுக தலைவர் கருணாநிதிக்கு சட்டப்பேரவைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று சட்டசபையில் திமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் சட்டப்பேரவைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர அனுமதி வேண்டும் என்று கூறினார். 


இந்த தீர்மானத்துக்கு சபாநாயகர் அவர்கள் குரல் வாக்கெடுப்புக்கு விட்டபோது, ஆளுங்கட்சி ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் ஏகமனதாக திமுக கொண்டு வந்த தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதன் மூலம் சட்ட சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருக்க கருணாநிதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.