Tamil Nadu State Assembly Budget Session 2024 2025 : 2024 - 25 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அவர் பேரவையில் வந்து அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசிக்காமல் புறக்கணித்தார். இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை முழுவதுமாக வாசித்தார். இது தொடர்பான சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு பிப்ரவரி 19 ஆம் தேதி அதாவது இன்று தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் :


2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை (Tamil Nadu Budget 2024-25) தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு (Thangam Thennarasu) இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப் போகிறார். இதனையொட்டி “தடைகளைத் தாண்டி... வளர்ச்சியை நோக்கி” 2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கும் முத்திரைச் சின்னத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நாளை அதாவது பிப்ரவரி 20 ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.


மேலும் படிக்க | Tn budget: இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்: எதிர்பார்ப்புகள் என்னென்ன?


தமிழக பட்ஜெட்டின் எதிர்பார்புகள் :
இந்நிலையில் தற்போது தமிழக பட்ஜெட்டில் (TN Budget 2024) முக்கிய அறிவிப்புகள் இன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


* அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்காக நடத்தப்படும் மாதந்திறம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படலாம்.


* இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகை திட்டம் கூடுதல் நிதியுதவி உடன் புதிய பயனாளர்களுக்கு விரிவுபடுத்தப்படலாம். 


* அதேபோல் திமுக தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்று இருந்த கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் சப்சிடி அதாவது மானியம் வழங்க அறிவிப்பு வெளியாகலாம்.


* ரேஷன் கடைகளில் மாதந்தோறும் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, பெண்களுக்காக அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு அதிகரிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் பெண்களுக்காக அறிவிக்கப்படலாம். 


* வீட்டு வாடகையை முறைப்படுத்த நடவடிக்கையை அரசு இந்த பட்ஜெட்டில் செயல்படுத்தலாம்.


* பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையின் மீது அரசு கவனம் செலுத்தலாம்.


* வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதையடுத்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. 


* பிப்ரவரி 22ஆம் தேதி விவாதத்திற்கு இரண்டு அமைச்சர்களும் பதிலளிப்பர். அதன்பிறகு நிதி ஒதுக்கீட்டிற்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படுகிறது.


* மாபெரும் 7 தமிழ் கனவுகள் என்று பட்ஜெட் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சமூகநீதி, கடைகோரி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இணைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலன், பசுமை வழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் என்ற 7 தலைப்புகளின் அடிப்படையில் பட்ஜெட் அறிவிப்புகள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | பாஜகவிற்கு தேர்தல் செலவிற்காக 6500 கோடி கொடுத்தவர்கள் யார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ