ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயசூரியன் (47). இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த உருவாட்டி (75) என்பவரின் மகள் காளீஸ்வரி (39) என்பவருக்கும் திருமணமாகி, இவர்களுக்கு 19 வயது மகன் மற்றும் 16 வயது மகள் ஆகிய இரு பிள்ளைகள்
உள்ளனர். உதயசூரியன் மதுபோதையில் தனது மனைவியுடன் சண்டையிட்டு காளீஸ்வரியை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தில்லியில் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா - தமிழ்நாடு ஆளுநர் RN.ரவி. சந்திப்பு!


இந்நிலையில், நேற்று மாலை உதயசூரியன் மது போதையில் தனது மனைவி காளீஸ்வரியை அடித்துள்ளார். இதனை தடுக்க வந்த மாமனார் உருவாட்டிக்கும் இவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஆத்திரமடைந்த மாமனார் உருவாட்டி கோடாரியால் தனது மருமகன் உதயசூரியனை தலை மற்றும் கை, கால் பகுதியில் வெட்டியுள்ளார்.


இதில் பலத்த காயமடைந்த உதயசூரியன் கமுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். உதயசூரியன் உடல் கமுதி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து கோவிலாங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் உருவாட்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் படிக்க | தேச பாதுகாப்பில் விளையாடாதீர்கள் - திமுகவுக்கு முருகன் எச்சரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ