உளுந்தூர்பேட்டையை அடுத்த களவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன். விவசாயக் கூலியான இவரின் மனைவி இறந்துவிட்டார். கேசவனுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்துள்ளார். இருவருக்கு திருமணமான நிலையில், கடைசி மகனான சிவமணிக்கு மட்டும் திருமணமாகவில்லை. 29 வயதான அவர், குடிக்கு அடிமையாகியுள்ளார். அவரின் நடத்தையை பார்த்த ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் யாரும் வரன் கொடுக்க விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | இரண்டு கள்ளத் தொடர்பு... ஒரு படுகொலை... பத்து மாதம் கழித்து இரண்டு பேர் கைது


இது குறித்து தந்தையிடம் சிவமணி நாள்தோறும் போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். புதன்கிழமையும் குடிபோதையில் வீட்டிற்கு வந்த சிவமணி, தந்தை கேசவனிடம் திருமணம் செய்து வைக்கக்கோரி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது. ஆவேசமடைந்த கேசவன், வீட்டில் இருக்கும் அரிவாளை எடுத்து மகனை வெட்டியுள்ளார். கழுத்தில் பலத்த காயமடைந்த சிவமணி, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். 


இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர், உயிரிழந்த சிவமணியின் உடலை பிரதே பரிசோதனைக்காக மருத்துவதுவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மகனை வெட்டிக் கொலை செய்த தந்தை கேசவனை தேடி வருகின்றனர். திருமணம் செய்துவைக்கக்கோரி முறையிட்ட மகனை தந்தை வெட்டிக் கொலை செய்தது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.


ALSO READ | கொலை குற்றவாளியின் ’மாஸ்’ ப்ளான் - போலீஸின் ’மாஸ்டர்’ பிளான்! ஜெயித்தது யார்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR