சென்னை தியாகராய நகரில் உள்ள உஸ்மான் சாலையில் பிரபல தனியார் துணிக்கடையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து புகை வெளியேறிக்கொண்டிருப்பதால், தீ விபத்து ஏற்பட்டுள்ள சென்னை சில்க்ஸ் அமைந்துள்ள பகுதி அபாயகரமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை தி.நகரில் உள்ள கடையின் 7 வது மாடி வரை பரவியுள்ள புகையை ரசாயன கலவை மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதே கட்டிடத்தில் அந்த நிறுவனத்தின் நகைக்கடையும் செயல்பட்டு வருகிறது. 


தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். ஆனால் ஐந்து மணி நேரமாக போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. தீ விபத்தால் ஏற்பட்ட வெப்பம் காரணமாக, கடையில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகள் வெடித்துச் சிதறி வருகின்றன. 


கடைக்குள் சிக்கிக் கொண்டிருந்த 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தீ எரிந்து வருவதால், கட்டிடம் பலவீனமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. 


இந்த விபத்தால் உஸ்மான் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னை சில்க்ஸ் அமைந்துள்ள பகுதி, அபாயகரமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.