சாத்தூரில் உள்ள பட்டாசு ஆலை ஒன்ரில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள துலுக்கன்குறிச்சியில் பட்டாசு ஆலை ஒன்று உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.


இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பட்டாசு தயாரிப்பு அறை மிகவும் சேதமடைந்தது. தற்போது இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.