சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவகாசி அருகே மேட்டுப்பட்டியில் வழிவிடு முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் புத்தாண்டு தினமான இன்று பட்டாசு தொழிற்சாலையில் வழக்கம்போல் பணி தொடங்கப்பட்டது. 


அப்போது மூலப்பொருட்கள் கலக்கும் பொழுது ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. 



இந்த விபத்தில் மூன்று அறைகள் தரைமட்டமாகின. இந்த நிலையில் குமார்,பெரியசாமி,செல்வம் என்ற வீரகுமார் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் ஒருவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பொழுதும் உயிரிழந்துள்ளனர்.


மேலும் 8 பேர் காயமடைந்த நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து காவல் துறையினரும் வருவாய் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


புத்தாண்டு தினமான இன்று பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் இறந்தது அப்பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


ALSO READ | சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி- முன்பதிவு இன்று முதல் தொடங்கியது


ALSO READ | கொரோனா அதிகரிப்பு: நர்சரி பள்ளிகளுக்கு தடை, திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு - தமிழக அரசு


ALSO READ | Corona prevention: வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR