தென்கிழக்கு ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னையில் சில மணி நேரம் மழை பெய்யலாம்.


வங்க கடலில் நிலவும் தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்பதால் தென்கிழக்கு ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். என வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.