சென்னை: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று சிறைபிடித்தது. இவர்களையும் சேர்த்து இலங்கை சிறையில் மொத்தம் 22 தமிழக மீனவர்கள் உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.


தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அந்த கடிதத்தில், "புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் இரண்டு படகுகளை இலங்கை கடற்படை நேற்று சிறைபிடித்துள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு மிரட்டப்படுகின்றனர்.


இன்று கைப்பற்றப்பட்ட படகுகள் உட்பட மொத்தம் 109 படகுகள் இலங்கை வசம் உள்ளது. நீங்கள் வெளியுறவுத்துறையிடம் பேசி இலங்கை வசமுள்ள 22 மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.